வல்வையில் வந்தது --.--.---- வையகம் மறந்தது 30.01.2011
ஞாயிற்றுகிழமை அன்று 11 மணிக்கு இறைபதம் எய்தினார்
பிரிந்தோம்......பெருமகனை!...
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட பொன்னுத்துரை தங்கமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும் தம்பிராசா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும் கொழும்பை வதிவிடமாகக் கொண்டவருமான இளைப்பாறிய சுங்கஇலகா அதிகாரியும்,வெள்ளவத்தை மயூராபதி தேவஸ்தானத்தின் புகழ்பூத்த அறங்காவலரும், அகிலஇலங்கை சமாதானநீதவானும் பெரும்சமூகசேவகருமாகிய உயர்திரு பொன். வல்லிபுரம் அவர்கள் 30.1.2011 இல் தெய்வத்திருவடி அடைந்தார். அன்னார் ரூபசவுந்தரியின் அன்புக்கணவரும். உதயகுமார். கலாராணி ஆகியோரின் பாசத்தந்தையும் பிரிதா. மயில்வாகனம். ஆகியோரின் அன்பு மாமனாரும் செந்தூரன், குமரன், வித்தியா, மயூரன், சுந்தரி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
இவர் சத்தியமூர்த்தி, சந்திரலிங்கம், பரிமளாதேவி, தனபாக்கியலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோரின் அன்புச்சகோதரனும் பொன்னுச்சாமி, காலம்சென்ற துரைராசா, சற்குணசவுந்தரி, இராஜசவுந்தரி, சுசிலாதேவி மற்றும் SVTசம்பத், காலம்சென்ற இராசதுரை, சந்திரதாஸ் ஆகியோரின் மைத்துனரும் பரமசிவம், தாயுமானவர், அமிர்தநாயகி, பத்மாவதி, கைலாசபதி ஆகியோரின் சகலையுமாவார்.
அன்னாரின் பூதவுடல் புதன்கிழமை 02.02.2011 காலை 10.00 மணியளவில் லோரிஸ் வீதி பம்பலபிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு வியாழக்கிழமை 03.02.2011 பி.ப. 3.15 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துசெல்லப்படும். உற்றார்உறவினர் நண்பர்கள் அன்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளவும்.
இங்கனம் :
வல்லிபுரம் உதயகுமார் (மகன்)
124/3, லோரிஸ் வீதி, கொழும்பு – 04
T.P:- 011 - 2584371


Paal Kudam festival




Pon. Vallipuram garlands a golden shawl on S. Nagarajah while S. Visvanathan and the priest look on

Mayura Amman

தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளிற்கு: